Friday, October 30, 2015

தமிழ் மக்களே! யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்

• தமிழ் மக்களே!
யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்
செய்தி- வன்முறையை ஆதரிக்க முடியாது. இந்தியாவுக்கு ஏற்றவாறு தமிழ்மக்கள நடந்து கொள்ள வேண்டும் - சம்பந்தர் அய்யா
சம்பந்தர் அய்யாவிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்
(1)வன்முறையை தமிழ் இளைஞர்கள் தாங்களாக ஏற்றுக்கொண்டார்களா அல்லது அவர்கள் மீது திணிக்கப்பட்டதா?
(2)அகிம்சை வழி சாத்தியமற்றதால் இளைஞர்கள் வன்முறையை தேர்ந்தெடுத்தார்களா? அல்லது அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளா?
(3) துரையப்பாவை துரோகி என்று வர்ணித்து அவரை இளைஞர்கள் மூலம் கொல்லவைத்து வன்முறையை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்?
(4)அவ்வாறு கொலை செய்த இளைனஞர்களுக்காக வழக்கு பேசி அவர்களை தியாகிகளாக்கியவர்கள் யார்?
(5)வன்முறையில் ஈடுபட்ட சிவகுமாரனை தியாகி சிவகுமாரன் என்று சொல்லி வாக்கு கேட்டு எம்.பி ஆனவர்கள் யார்?
(6)இந்திய அரசு போராளிகளுக்கு பயிற்சியும் ஆயதமும் வழங்கியது அகிம்சை வழியா அல்லது வன்முறை வழியா?
(7) அமைதிப்படை என்று வந்து பல்லாயிரம் மக்களை கொன்று குவித்தது வன்முறை இல்லையா? ஆனால் அதனை எதிhப்பது மட்டும் வன்முறையா?
(8) ஆயதப் போராட்டம் நடத்திய புலிகளை தமிழ்மக்களின் ஏகோபித்த ஒரே பிரதிநிதிகள் என்று கூறி எம்.பி பதவி பெற்றவர்கள் யார்? அப்போது புலிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக தெரியவில்லையா?
(9) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொல்லாம். கற்பழிக்கலாம். கற்பழித்த ராணுவ வீரர்களை நீதிமன்றில் அஜர் செய்ய இலங்கை அரசு மறுக்கலாம். அது குறித்து உங்கள் சர்வதேசமும் கண்டு கொள்ளாமல் இருக்கும். ஆனால் அதற்கு எதிராக இளைஞர்கள் ஆயதம் ஏந்தினால் அது வன்முறையாக உங்களுக்க தெரிவது ஏன்?
(10) வன்முறையின்றி எந்த தீர்வும் பெற முடியாது என்ற தோழர் லெனின் கூறுகிறார். அப்படியென்றால் அகிம்சை வழியில் எப்படி தீர்வு பெற முடியும் என்றோ அல்லது அவ்வாறு தீர்வு பெற்ற ஒரு நாட்டையோ உங்களால் காட்ட முடியுமா?
தயவு செய்து உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்காதீர்கள். இனத்திற்காக போராடி உயிர் நீத்த போராளிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.

No comments:

Post a Comment