Friday, October 30, 2015

இந்த அவலத்தை புத்திஜீவி என்று அழைக்கிறார்களே!

• இந்த அவலத்தை புத்திஜீவி என்று அழைக்கிறார்களே!
தனது சொந்த இனத்தை கொன்றவர்களுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிட்டவர்
தனது சொந்த இனத்தை அழித்தவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாடியவர்
தனது சொந்த இனத்தை அடிமைப்படுத்திய சிங்கக்கொடியை ஏந்தியவர்
அப்படிப்பட்டவர்,மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முதியவரைக்கொன்ற பி.ஜே.பி கொடியை அணிய வெட்கப்படுவாரா?
இலங்கை அரசுக்கு போர்க்கப்பல் இலவசமாக மோடி அரசு வழங்குவது குறித்து இவருக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் அதனை எதிர்க்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாம்.
நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவையென்றும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசின் ஆதரவு தேவையில்லையாம். ஆனால் இலங்கை அரசை தொடர்ந்து காப்பாற்றி வரும் இந்திய அரசின் ஆதரவு மட்டும் இவருக்கு போதுமாம்.
இத்தகைய அவலமான ஒருவரை சிலர் எப்படி "புத்திஜீவி" என்று அழைக்கிறார்கள்?

No comments:

Post a Comment