Friday, October 30, 2015

மேலும் மேலும் தமிழக மக்களை சென்றடையும் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள்.

•மேலும் மேலும் தமிழக மக்களை சென்றடையும் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள்.
தமிழக மக்களால் மட்டுமே சிறப்புமுகாம்களை மூடவைக்க முடியும். எனவே எந்தளவு முடியுமோ அந்தளவு விரைவாக தமிழக மக்களுக்கு சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றி விளக்க வேண்டும்.
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் 21.09.15யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
நேற்று (16.10.15) கோவையில் இந் நூல் வெளியிடப்பட்டது.
சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு விரைவில் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கையை இவ் நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.
சிறப்புமுகாம்கள் விரைவில் மூடப்பட வேண்டும். அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவ் அரிய பணியை முன்னெடுக்கும் தமிழக உறவுகளின் உணர்வுகளை பாராட்டுவதோடு அவர்களது முயற்சி விரைவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment