Friday, October 30, 2015

நூல் வெளியீடு

நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் " நூல்
• 21.09.15 யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
• 16.10.15யன்று கோவையில் வெளியிடப்பட்டது.
• 25.10.15 யன்று செய்யாறில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது செய்யாறு மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் சிறப்புமுகாம் உள்ளது.
இச் சிறப்புமுகாம்களை மூடுமாறு கோரி தமிழ்தேசமக்கள்கட்சியினரால் இந் நூல் வெளியீடுகள் நடத்தப்படுகின்றன.
எதிர்வரும் 25.10.15 யன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறில் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
செய்யாறு நிகழ்வு விபரம் :-
• காலம்- 25.10.15 , மாலை 5.00 மணி
• இடம்- ஜே.பி.அர் திருமண மண்டபம் , பழைய காஞ்சிபுரம் சாலை, செய்யாறு
• வரவேற்புரை- வெற்றிதமிழன் , தமிழ்தேசமக்கள்கட்சி
• தலைவர்- தோழர் தமிழினியன்
• நூல் அறிமுகம்- தமிழ்முகிலன் , தமிழர் கழகம்
• நூல் பெறுவோர் - மு.செந்தில்வேல் , கலவை
செம்பியன் , தமிழ்மாணவர் கூட்டமைப்பு
கருத்துரை:
• வழக்கறிஞர் புகழேந்தி , தலைவர், தமிழ்தேசமக்கள்கட்சி
• தோழர் செந்தமிழ்குமரன் , செயலர், தமிழ்தேசமக்கள்கட்சி
• ஆழி செந்தில்நாதன் ,மக்கள் இணையம்
• சரவணன் தங்கப்பா
• வே.தாண்டவமூhத்தி , மக்கள் இணையம்
• மேகநாதன், வெளிச்சம் சமூக விழிப்பணர்வ இயக்கம்
தொடரும் இந் நூல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை எற்படுத்துகின்றன. இவை மிக விரைவில் சிறப்புமுகாம்களை மூட வழி செய்யும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கின்றன.
நூல் வெளியீட்டை முன்னின்று நடாத்தும் எமது உறவுகளின் உணர்வுகளை பாராட்டுகிறோம். அவர்களின் இந் நூல் வெளியீடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment