Friday, October 30, 2015

சுமந்திரன் அவர்கள்

 சுமந்திரன் அவர்கள்
பனங்கொட்டைகளின் பாராளுமன்ற உறுப்பினரா?
அல்லது தமிழ்மக்களின் பாராளுமன்ற உறுப்பினரா?
தமது விடுதலை கோரி 
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.
இந்திய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்வர்கள் 10வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இவர்களது விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்தாயிரம் பனங்கொட்டைகள் நடுவதை பெருமையாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
சிறையில் எமது உறவுகள் வாடுகின்றார்கள். அவர்களது வருகைக்காக உறவினர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் எமது எம்.பி சுமந்திரனோ அதுகுறித்து எந்த கவலையும் இன்றி மாலை, பொன்னாடை போர்த்தி மகிழ்கிறார்.
இலங்கை சிறையில் அரசியல்கைதிகள் யாரும் இல்லை என்று நீதி அமைச்சர் கூறுகிறார். அவர்கள் அரசியல் கைதிகள்தான் என்று இன்னொரு அமைச்சர் மனோகணேசன் கூறுகிறார். ஆனால் இதை எடுத்துக்கூறி விடுதலை பெற்றுத்தரவேண்டிய எமது "சட்டமேதை" சுமந்திரனோ எதுவும் கூறாமல் மௌனமாக இருக்கிறார்.
சுமந்திரனின் தற்போதைய கவலை எல்லாம் சிறையில் உள்ளவர்களின் விடுதலை அல்ல. மாறாக பத்தாயிரம் பனங்கொட்டை நட்டு அதற்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவேண்டும் என்பதே!

No comments:

Post a Comment