Saturday, March 30, 2019

28 வருடங்களாக தன் மகனின் விடுதலைக்காக ஓயாது நடந்த

28 வருடங்களாக தன் மகனின் விடுதலைக்காக ஓயாது நடந்த
அந்த அற்புதமான தாய் அழைக்கிறார் மனித சங்கிலியில் பங்கேற்க.
ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றினைந்து பங்கேற்போம். ஒருமித்து குரல் கொடுப்போம்.
அவர் மகன் பேரறிவாளனை விடுவித்து அவருடன் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
இனியாவது அவர் கால்கள் ஓய்வு பெறட்டும்.
25 வருடங்களாக தாய் தந்தையரை காணமுடியாமல் லண்டனில் தவித்துக் கொண்டிருக்கும் அரித்ராவுக்கு அவர் தாய் தந்தையரான முருகன் நளினியை விடுவித்து உதவுவோம்
சாவதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் சாந்தனின் தாயாருக்கு அவர் மகனை விடுவித்து உதவுவோம்.
ஏழு தமிழரின் விடுதலை என்பது ஏழு கோடி தமிழர்களின் விருப்பம் என்பதை இந்திய அரசுக்கு காட்டுவோம்.

No comments:

Post a Comment