Saturday, March 30, 2019

ஐயா! இந்த முறையாவது உண்மையை கூறுவீர்களா?

ஐயா!
இந்த முறையாவது உண்மையை கூறுவீர்களா?
•நெடுமாறன் ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
புலிகள் அமைப்பின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் கடந்தமுறை தெரிவித்திருந்தீர்கள்.
தயவு செய்து இந்தமுறையும் அப்படியான பொய்கள் கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயல வேண்டாம்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக இலங்கை இந்திய அரசுகளுக்கே அது பெரிதும் உதவி புரிகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் வசம் இருக்கும் புலிகளின் சொத்தை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பிரபாரன் உயிருடன் இருப்பதாக பொய் கூறுகின்றீர்கள் என சிலர் கூறுகின்றனர்.
நீங்கள் ஆரம்பம் முதலே இந்திய உளவுப்படை ஏஜென்ட் என்றும் இப்பவும் அதற்காகவே இப்படி பொய்களை கூறுவதாக வேறு சிலர் கூறுகின்றார்கள்.
ஆனால் இனியும் நீங்கள் தொடர்ந்து பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினால் இவர்கள் யாவரும் உங்களைப்பற்றி கூறுவது உண்மைதானோ என நாமும் நம்ப வேண்டி ஏற்படும்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறியதைக்கூட ஒரு பேச்சுக்காக ஏற்பதாக வைத்தாலும் அவருக்கு நீரிழிவுநோய் மாறிவிட்டது என்று நீங்கள் கூறியதை “மெடிக்கல் மிரக்கிள்” என்பதா?
ஐயா!
இன்னும் எத்தனை ஆண்டு வேணாலும் வாழ்ந்துவிட்டு போங்கள். ஆனால் “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்” என்று தயவு செய்து பொய் சொல்ல வேண்டாம்.
இதுவே நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment