Saturday, March 30, 2019

•மகளே ! எங்களை மன்னித்து விடு!

•மகளே !
எங்களை மன்னித்து விடு!
நீ பெரிய பொண்ணாக இருந்திருந்தால்
துப்பட்டா போட்டிருந்தால் நடந்திருக்காது என்று கூறியிருப்போம்
நீ கைத்தொலைபேசி வைத்திருந்தால்
அதனால்தான் இது நடந்தது என்று கூறியிருப்போம்
நீ என்ன சாதி என்று தெரிந்தால்
இது நாடக காதலால் நடந்தது என்று அறிக்கை விட்டிருப்போம்
நீயோ ஏழு வயது பள்ளி சிறுமி
என்ன சொல்லி மூடி மறைப்பது என்று தெரியவில்லை
மன்னித்து விடு மகளே
நாங்கள் ஒருபுறம் தேர்தலில் பிசி
இன்னொருபுறம் IBL கிரிக்கட்டில் பிசி
அதனால் உன் பிரச்சனையில் கவனம் செலுத்த முடியவில்லை.
அப்புறம் மகளே
உனக்கு ஒரு சேதி தெரியுமா?
எமது பிரதமர் செய்மதியை சுட்டு வீழ்த்தி விட்டார்
இப்போது இந்தியா வல்லரசு நாடாகிவிட்டது.
ஜெய் ஹிந்த்!
பாரத மாதாவுக்கு ஜே !

No comments:

Post a Comment