Saturday, March 30, 2019

புரட்சி புயல் அவர்களே

புரட்சி புயல் அவர்களே
கொஞ்சம் திரும்பி பாருங்கள்
ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்து நிற்கின்றீர்கள்
ஒரு சீட்டுக்காக திமுக வை ஆதரிப்பதைக்கூட சகித்து கொள்ளலாம்.
ஆனால் காங்கிரஸ் கட்சியை எப்படி நியாயப்படுத்தப் போகின்றீர்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.
அன்னை சோனியாவை ஆதரியுங்கள் என்று உங்கள் குரல் முழங்கும்போது அன்னை பார்வதி அம்மாளின் முகம் வராமலா போகும்?
ராகுல்காந்தியை பிரதமராக்குவோம் என்று மேடையில் நீங்கள் பேசும்போது சிறுவன் பாலச்சந்திரன் முகம் உங்களுக்கு வராமலா போகும்?
சரி. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனியாவது இப்படி நடக்காது என்ற ஒரு உறுதிமொழியையாவது காங்கிரசிடமிருந்து உங்களால் பெற முடிந்ததா?
நடந்ததற்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இனி இப்படி நடக்காது என்றும் உறுதி தரவில்லை.
அப்புறம் எதற்காக காங்கிரசை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள்.?
கேவலம் ஒரு சீட்டுக்காகவா?
பேசாமல் கட்சியை கலைத்துவிட்டு திமுக வில் சங்கமித்துவிடுங்கள்.

No comments:

Post a Comment