Saturday, March 30, 2019

தாங்கள் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றார்கள்

தாங்கள் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றார்கள்
தாங்களே தமிழ்மக்களின் தலைவர்கள் என்றார்கள்
இப்போது அதே மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள்
தங்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள்
சரி. நீங்கள் வோட்டு கேட்டு வரும்போது இல்லாத ஆபத்து இப்போது ஏன் வந்தது?
நீங்கள் தமிழ் மக்களுக்கு உண்மையாக நடந்திருந்தால் தமிழ் மக்களே உங்களுக்கான பாதுகாப்பை தந்திருப்பார்களே?
சரி அதையும் விடுவம். சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் சிங்கள அரசுக்கு எதிராக எப்படி போராடப் போகிறீர்கள்?
அல்லது, இனி நீங்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்று தமிழ் மக்கள் எப்படி உங்களை நம்புவது?
சரி. அது கூடப் பரவாயில்லை. அடுத்த முறை எந்த முகத்தோடு சிங்களப் பொலிசுடன் வந்து தமிழ் மக்களிடம் வோட்டு கேட்கப் போகிறீர்கள்?
நீங்கள் என்ன துரோகம் செய்தாலும் அதை நியாயப்படுத்தி உங்கள் செம்புகள் எழுதுவார்கள் என நீங்கள் எதிர் பார்க்கலாம்.
ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உங்களை நம்பி வோட்டு போடுவார்கள் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்?
ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். தமிழ் மக்கள் உங்களை போட்டு தள்ளுவது என்று முடிவு எடுத்து விட்டால் அப்புறம் சிங்கள பொலிஸ் மட்டுமல்ல இந்திய அரசாலும் உங்களை காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment