Saturday, March 30, 2019

•அடங்க மறு !

•அடங்க மறு !
நீ சின்ன குழந்தைதானே?
நீ எறிவது வெறும் கல்லுதானே?
என்றுதான் அவர்கள் கூறுவார்கள்
இதனால் என்ன சாதித்தவிட முடியும்?
என்று நக்கலாக கேட்பார்கள்
அதுமட்டுமல்ல சிறுவர்களை தூண்டிவிட்டு பெரியவர்கள் ஒளிந்திருப்பதாக கிண்டல் வேறு அடிப்பார்கள்
அதையும்தாண்டி நீ எறிந்து விட்டாலோ
உன்னை “குழந்தை போராளி” என்பார்கள்.
இறுதியாக உன்னை கொன்றுவிட்டு உன் தந்தை ஒரு பயங்கரவாதி. எனவே நீயும் பயங்கரவாதி என்பார்கள்.
இங்கு அவர்களுக்கு அச்சமூட்டுவது என்னவெனில்
நீ கல் எறிகிறாய் என்பதல்ல – மாறாக
நீ அவர்களுக்கு அடங்க மறுக்கிறாய் என்பதே!
குறிப்பு – ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் - சே குவாரா

No comments:

Post a Comment