Saturday, March 30, 2019

இவர் ஒரு ஈழத்து தமிழ்பெண்

இவர் ஒரு ஈழத்து தமிழ்பெண்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட சமூகத்தில்
துப்பாக்கி ஏந்தி போராடப் புறப்பட்ட பெண் இவர்
களத்தில் ஒரு கை போனவுடன் அவர் துவண்டு இருந்துவிடவில்லை
மறு கையுடன் களத்தில் அதே துப்பாக்கியை ஏந்தி நின்றார்
இந்த அர்ப்பணிப்புதான் ஈழத் தமிழர் போராட்டத்தை உலகறிய வைத்தது.
இன்று இம்ரான்கான் ஈழத் தமிழர் போராட்டம் பற்றி பேசியது ஆச்சரியம் இல்லை.
மாறாக அவர் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம்
.
இனி ஒவ்வொருவராக உலகம் பேச ஆரம்பிக்கும்.
பேச வைப்போம்!
மாண்ட போராளிகளை விட அதிக தூரத்தை நாம் பார்ப்போம்
ஏனெனில் மாண்ட போராளிகள் தங்கள் தோள்களில் அல்லவா எம்மை தாங்கி நிற்கிறார்கள்.

No comments:

Post a Comment