Saturday, March 30, 2019

எதிரி தெளிவாக இருக்கிறான்.

எதிரி தெளிவாக இருக்கிறான்.
நம்மவர்கள்தான் குழம்புகிறார்கள்
இவர்கள் என்ன மதம் என்று எதிரி பார்க்கவில்லை
இவர்கள் தமிழர் இனம் என்றுதானே கொன்று குவித்தான்.
எதிரி சிவன் ஆலயத்தின் மீதும் குண்டு போட்டான்
எதிரி இயேசுவின் தேவாலயத்தின் மீதும் குண்டு போட்டான்.
நாம் அழிந்தபோது சிவனும் வந்து காப்பாற்றவில்லை
நாம் அழிந்தபோது இயேசுவும் வந்து காப்பாற்றவில்லை
அப்புறம் ஏன்டா மத ரீதியாய் பிரிந்து உங்களுக்குள் அடிபட்டுக் கொள்கிறீர்கள்?
குறிப்பு – “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும் - தோழர் லெனின்

No comments:

Post a Comment