Saturday, March 30, 2019

இவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்

இவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என்றார்கள்
இவர்களுடைய போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்கள்.
இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை ராணுவத்தை விட இவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்றார்கள்.
சரி. அப்படியென்றால் 10 வருடமாக ஏன் இது குறித்து விசாரணை செய்யவில்லை?
உங்கள் கையில்தானே அரசும் அதிகாரமும் இருக்கிறது.
நீங்கள் நினைத்திருந்தால் ஒரு வாரத்தில் இறந்தவர்களின் பட்டியலை திரட்டி வெளியிட்டிருக்கலாமே?
அதில் எத்தனைபேர் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள், எத்தனை பேர் இவர்களால் கொல்லப்பட்டவர்கள் என்ற விபரத்தை காட்டியிருக்கலாமே?
இவர்களிடமிருந்து தமிழ் மக்களை காக்கவே போர் தொடுத்தோம் என்றீர்களே
அப்ப ஏன்டா தேர்தல் வந்தால் இவர்களின் பாட்டை போட்டு வோட்டு கேட்கிறீர்கள்?
அப்புறம் என்டா மாவீரர் தினத்தில் விளக்கேற்றி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறீர்கள்?
போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்.

No comments:

Post a Comment