Saturday, March 30, 2019

வாலை ஆட்டுவதால் நாய்க்கு இறைச்சி துண்டு போடப்படுகிறதா?

•வாலை ஆட்டுவதால் நாய்க்கு இறைச்சி துண்டு போடப்படுகிறதா? அல்லது
இறைச்சி துண்டு போடப்படுவதால் நாய் வாலை ஆட்டுகிறதா?
இலங்கை அரசு உடன் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் ரணில் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் மகிந்தவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரணிலும் மகிந்தவும் அப்படி என்னதான் ஒருமித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்?
காணாமல்போனோர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனரா?
இல்லை
இரண்டு வருடமாக போராடி வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனரா?
இல்லை.
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனரா?
இல்லை.
இவை எதுவும் இல்லை என்றால் இதைவிட அப்படி முக்கியமான பிரச்சனைதான் என்ன?
சம்பந்தர் அய்யாவுக்கு கொழும்பில் ஓன்றரை ஏக்கர் நிலத்தில் ஆடம்பரமான பங்களா மற்றும் 5 கோடி ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்கள் உடனடியாக வழங்க அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பந்தர் அய்யாவுக்கு இவற்றை உடனடியாக வழங்குவதற்கு மகிந்த ராஜபக்சவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு விசுவாசமான நாய்க்கு எத்தனை இறைச்சி துண்டையும் எஜமான் வழங்கட்டும்.
ஆனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சம்பந்தர் அய்யா வழங்கிவரும் உதவிக்காக இந்த வசதிகள் தரப்படுகின்றன என்று சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சம்பந்தர் அய்யா தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுப்பதையே எதிரி பச்சையாக “நல்லிணக்கம்” என்று கூறுகிறான்.
என்ன கொடுமை என்றால் இந்த கிழட்டு நாய் சலுகைகளுக்காக வாலாட்டுவதையும் சிறந்த இராஜதந்திரம் என்று பேஸ்புக்கில் எழுத நாலு செம்புகள் இருக்குதுகளே?

No comments:

Post a Comment