Saturday, March 30, 2019

விழுப்புரத்தில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட

•விழுப்புரத்தில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட
வடிவேல் ராவணன் தோற்க வேண்டும் என்பதே முக்கியம்.
விழுப்புரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக வடிவேல் ராவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வடிவேல் ராவணன் ஏற்கனவே பலமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளார். இம்முறையும் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.
கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் அப்புரூவராக மாறி காட்டிக் கொடுத்தவர் இந்த வடிவேல் ராவணன்.
1994ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அப்ரூவராக மாறிய வடிவேல் ராவணன் அவரது கட்சியில் சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினேன்;.
அதற்கு ராமதாஸ் அவர்கள் “ அவர் அப்ரூவராக மாறியது தவறுதான். ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர் வாக்குமூலத்தை மாற்றி கூறுவார்” என என்னிடம் உறுதியளித்தார்.
அதேபோன்று மதுரை சிறையில் என்னை சந்தித்த வடிவேல் ராவணணும் “ பொலிசாரின் ஆசை வாhத்தையை நம்பி ஏமாந்துவிட்டேன். வழக்கு விசாரணைக்கு வரும்போது நிச்சயம் யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் “ என உறுதியளித்திருந்தார்.
ஆனால் 1997ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேல் ராவணன் அப்ரூவராக சாட்சியம் அளித்தார். அவர் பொலிசாருக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.
அவர் காட்டிக் கொடுத்தமையினால் தோழர்கள் பொழிலன், முகிலன், இளங்கோ போன்றவர்களுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இவ்வாறு அப்ரூவராக மாறி தமிழ் தேசிய உணர்வாளாத்களை காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணனை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருப்பது மட்டுமன்றி அவருக்கு தேர்தலில் சீட்டும் வழங்கியுள்ளார் ராமதாஸ்.
எனவே வடிவேல் ராவணன் தோற்கடிக்கப்படுவது காட்டிக் கொடுப்பவர்களுக்கும் அவர்களுக்கு சீட் வழங்குபவர்களுக்கும் படிப்பினையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment