Saturday, July 30, 2016

•தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்- பாரதி

•தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்- பாரதி
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த உலகம் அழிக்கப்படவில்லை.
மாறாக தனக்கான உணவை எடுத்துக் கொண்டவனை மரத்தில் கட்டிவைத்து மொட்;டை அடிக்கிறது இந்த உலகம்.
இந்த சிறுவர்களின் தோளில் பூநூல் இருந்திருந்தால் இந்த தண்டனை கிடைதிருக்குமா என்று நான் உங்களை கேட்கப் போவதில்லை.
ஆனால் நான் இங்கு சொல்ல விரும்புவதெல்லாம் “வன்முறையாளர்கள் உருவாதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்” என்பதையே!
இந்த உலகில் முதலாளி ஏழையை ஏமாற்றுவது வியாபாரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ஏழை ஏமாற மறுத்து போராடினால் அது வன்முறை எனப்படுகிறது.
போராடுபவர்கள் பயங்கரவாதி என்று சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதுதான் தமிழ் மக்களுக்கு நடந்தது. காஸ்மீர் மக்களுக்கும் நடக்கிறது. சதீஸ்கர் பழங்குடி மக்களுக்கும் நடக்கிறது.

No comments:

Post a Comment