Saturday, July 30, 2016

•தலை மட்டுமா மொட்டையடிக்கப்பட்டுள்ளது? மொத்த இனமும் அல்லவா மொட்டை அடிக்கப்பட்டுள்ளது!

•தலை மட்டுமா மொட்டையடிக்கப்பட்டுள்ளது?
மொத்த இனமும் அல்லவா மொட்டை அடிக்கப்பட்டுள்ளது!
துருக்கியில் ராணுவப்புரட்சி நடந்தபோது துருக்கியஇளைஞர்கள் டாங்கியின் சில்லில் தலையைக் கொடுத்து நாட்டைக் காப்பாற்றினார்கள்.
காஸ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கல் எறிந்து சிறுவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள்.
ஆனால் தமிழ் இளைஞர்கள் ரஜனியின் கபாலி படத்திற்காக தலையை மொட்டையடிக்கிறார்களே!
தமிழ் இளைஞர்களுக்கு,
• திருவள்ளுவரை பிளாஸடிக் பையில் போட்டு கட்டி வைத்தாலும் கவலையில்லை.
• பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினாலும் கவலை இல்லை.
• ஏழு பேர் விடுதலையை மத்திய மாநில அரசு மறுத்தாலும் கவலை இல்லை.
• தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தாலும் கவலை இல்லை
• தொப்புள்கொடி உறவுகள் என நம்பி வந்த அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்தாலும் கவலை இல்லை.
அவர்களுடைய கவலை எல்லாம் “கபாலி” படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கட் எப்படி எடுப்பது என்பது பற்றியே!
அதனால்தான் மற்ற இனம் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ்கிறது. தமிழ் இனம் மட்டும் தலை குனிந்து வாழ்கிறதா?

No comments:

Post a Comment