Saturday, July 30, 2016

•தோழர் அழகனை நினைவில் கொள்வோம்!

•தோழர் அழகனை நினைவில் கொள்வோம்!
தமிழின விடுதலைக்காக அவர் சிந்திய ரத்தம் வீண் போகாது என்று உறுதி கொள்வோம்.
மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான- மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1983ம் ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.
இக் கொடூரமான வெறி கொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார்.
தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர்.
புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கினார்.
தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார்.
அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் வெலிக்கடை சிறையில் (1983)அவர் படுகொலை செய்யப்பட்டார்.
தோழர் அழகன் இறக்கும் கணம் வரை போராட்டத்தில் உறுதியாகவே இருந்துள்ளார். தமிழின விடுதலைக்காக அவர் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீணாகாது.
தோழர் அழகன் காட்டிய பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்.
அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

No comments:

Post a Comment