Saturday, July 16, 2016

•இவர்களும் பயங்கரவாதிகளா?

•இவர்களும் பயங்கரவாதிகளா?
காஸ்மீரில் கடந்த இரு தினங்களாக 30 க்கு மேற்பட்ட காஸ்மீர் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் என்று கேட்டால் அவர்கள் “பயங்கரவாதிகள்” என்று கூறுகிறார்கள்.
குஜராத்தில் 4 தலித் இளைஞர்கள் இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள்; செய்த குற்றம் என்ன? இவர்களும் பயங்கரவாதிகளா?
செத்த மாட்டில் இருந்து தோல் எடுப்பது குற்றமா? அதற்காக அவர்கள் நடுவீதியில் வைத்து தாக்கப்பட வேண்டுமா?
உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. ஆனால் இதுவரை மாட்டைக் கொன்றமைக்காக எந்தவொரு கம்பனி முதலாளியும் தாக்கப்படவில்லையே? அது ஏன்?
முதலாளி தன் வியாபாரத்திற்காக மாடுகளை கொன்று வெளிநாட்டிற்கு எற்றுமதி செய்யலாம். ஆனால் நான்கு தலித் இளைஞர்கள் செத்த மாட்டில் இருந்து தோல் உரிப்பது தண்டனைக்குரிய குற்றமா?
இந்தியாவில் தலித்துகளை விட செத்த மாடுகள் உயர்ந்தவையா? மனிதனைவிட மாடுகள் உயர்ந்தது எனில் 2020ல் இந்தியா வல்லரசு ஆகுமா?
இதில் வேடிக்கை என்னவெனில் இந்தியாவில் தலித் மக்களை கொல்லும் மோடியின் அரசு யாழ்ப்பாணத்தில் அம்பேத்கார் விழா கொண்டாடவுள்ளது.
கிளிநொச்சியில் ஒரு பாடசாலையின் அதிபராக இந்திய வம்சாவளித் தமிழரான பெருமாள் கணேசன் வரக்கூடாது என தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தடுக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தமிழரான துணைத் தூதர் மூhத்தி அவர்கள் பெருமாள் கணேசனுக்கு நியாயம் கிடைக்க அக்கறை கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அம்பேத்கார் விழா கொண்டாடப் போகிறாராம்.
இன்னும் எத்தனை காலம் இவர்கள் ஏமாற்ற அனுமதிப்பது?
இன்னும் எத்தனை காலம் இவர்களை நம்பி ஏமாறுவது?

No comments:

Post a Comment