Saturday, July 30, 2016

•தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !!

•தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !!
ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்த முத்துக்குமார் பிறந்த அதே மண்ணில்தான்,
ஏழு பேர் விடுதலைக்காக தன் உயிரை மாய்த்த செங்கொடி பிறந்த அதே மண்ணில்தான்,
இவர்கள்,
நடிகர் ரஜனிக்காக மண் சோறு சாப்பிடுகிறார்கள்
நடிகர் ரஜனிக்காக தலைக்கு மொட்டை போடுகிறார்கள்
நடிகர் ரஜனி கட்அவுட்டிற்கு பால் ஊற்றுகிறார்கள்
இவர்களுக்கு,
தமிழர்கள் முள்ளிவாயக்காலில் கொன்று குவிக்கப்பட்டது குறித்து கவலை இல்லை
தமிழர்கள் மரத்திருடர்கள் என்று ஆந்திராவில் சுட்டுக் கொல்வது குறித்தும் கவலை இல்லை
தமிழ் மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்வது குறித்தும் கவலை இல்லை
இவர்களும் தமிழர்கள்தானே?
இவர்களால் எப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ள முடிகிறது?
மன்னிக்கவும்
தமிழன் என்று சொல்லவும் முடியவில்லை!
தலை நிமிர்ந்து நிற்;கவும் முடியவில்லை.!!

No comments:

Post a Comment