Saturday, July 30, 2016

•இனவாதத்தின் மூலம் ஆட்சியை பிடிக்க முயலும் மகிந்த ராஜபக்ச!

•இனவாதத்தின் மூலம் ஆட்சியை பிடிக்க முயலும் மகிந்த ராஜபக்ச!
இனவாதத்தின் மூலம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க மகிந்த ராஜபக்சாக்கள் முயலுகிறார்கள்.
பாதயாத்திரை மூலம் நாட்டில் இனவாதத்தை பரப்பி இனக் கலவரங்களை உருவாக்க முயலுகிறார்கள்.
தங்கள் மீதான ஊழல் மற்றும் நிதிக் குற்றவியல் வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள்.
வழக்கு போட்டு கைது செய்தால் ஒரு வாரத்தில் பிணையில் வெளியே வந்துவிடுகிறார்கள். வெளியே வந்து மக்கள் மத்தியில் இனவாதத்தை உருவாக்கிறார்கள்.
சட்டத்தின் பிடியில் தப்புவதற்காக, மக்களுக்காக போராடுவதாக வேடம் போடுகிறார்கள்.
இவர்களது போலி வேடத்தை அம்பலப்படுத்துமுகமாக இவர்கள் புரிந்த அத்தனை குற்றங்களுக்கும் வழக்கு பதிவு செய்து கூடிய விரைவில் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் பாத யாத்திரைக்கே 18 மில்லியன் ரூபா பணம் செலவு செய்துள்ளார்கள். இன்னும் கோடிக்கணக்கான ரூபாய்க்களை செலவு செய்யவுள்ளார்கள்.
சட்டவிரோதமாக இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இவர்களை வெளியில் விட்டு வைத்திருப்பதால்தான் இவர்கள் மக்களை குழப்பும் முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
எனவே மக்களினதும் நாட்டினதும் நலக் கருதி பிணையில் வரமுடியாதபடி வழக்கு பதிவு செய்து இவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
இவர்கள் மீதான வழங்குகள் யாவும் விரைந்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும்.
இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது எதிர்காலத்தில் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
இவர்கள் முன்வைக்கும் எட்கா மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை மற்றும் வட் வரி விதிப்பு எதிர்ப்பு என்பன நியாயமான கோரிக்கைதான்.
ஆனால் இவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைப்பது மக்கள் நலன் சார்ந்து அல்ல. மாறாக தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே.
எனவே மக்கள் இவர்களின் சூழ்சிகளுக்கு பலியாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனியாவது இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment