Saturday, June 30, 2018

பாவப்பட்ட பணத்தில் 963ரூபாவை ஆட்டயப் போட்டவன் யாரடா?

•பாவப்பட்ட பணத்தில் 963ரூபாவை
ஆட்டயப் போட்டவன் யாரடா?
முள்ளிவாயக்கால் நினைவு நிகழ்விற்கு தான் கொடுத்த 7000 ரூபாவை திருப்பி தரும்படி மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கேட்டிருந்தார்.
இதையடுத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் ஒரு ரூபா வீதம் பிச்சை எடுத்து 7000 ரூபாவை தவராசாவின் வீட்டில் போட்டுள்ளனர்.
ஆனால் அதில் 6037 ரூபா மட்டுமே இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அப்படியென்றால் மீதி 963 ரூபாவை ஆட்டயப் போட்டவன் யாரடா?
ஆனாலும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
பாவப்பட்ட பணத்தை வழங்கியதன் மூலம் தவராசாவின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்கள்.
இனி தவராசா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஏனெனில் தவராசாவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் இனி இந்த பாவப்பட்டபணம்தான் மக்களுக்கு ஞாபகம் வரும்.
சபாஷ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே!

No comments:

Post a Comment