Saturday, June 30, 2018

மோடி அவர்களே!

மோடி அவர்களே!
மலம் அள்ளுவது தலித்துகளுக்கு ஆன்மீக அனுபவத்தை கொடுக்கும் என்றால்
கோயிலில் மணி ஆட்டும் பார்ப்பணர்கள் எல்லோரும்
அதை விட்டுட்டு வந்து மலம் அள்ள தயாரா?
ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன்
பரம்பரை பரம்பரையாக கையால் அள்ளும் அவலத்தை
நியாயப்படுத்தாமல் உடன் முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
இந்த நாலு வருடத்தில் எத்தனையோ
புதிய இந்தியாவை பெத்துப் போட்டுவிட்டீர்கள்
.
ஆகக்குறைந்தது இந்த மலத்தை கையால் அள்ளாத
ஒரு இந்தியாவையாவது பெத்து போட்டுவிட்டு செல்லுங்கள்.
டிஜிட்டல் இந்தியா என்கிறீர்கள்.
2020ல் இந்தியா வல்லரசு என்கிறீர்கள்.
இதில் “மலம் அள்ளுவது தலித்துகளுக்கு ஆன்மீக அனுபவம் கொடுக்கும்” என் கூறுவது உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா?
குறிப்பு-
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடமாம்.
பாரத் மாதாகிக்கே ஜே!

No comments:

Post a Comment