Saturday, June 30, 2018

வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்

•வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்
நேற்றையதினம் நான் போட்ட பதிவு ஒன்றை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியுள்ளது.
இந்தியாவில் ஒருபுறம் குடும்பமாக தற்கொலை செய்த விவசாயிக் குடும்பத்தின் படத்தையும் மறுபுறம் 121 மாடுகளுக்கு 121 பூசாரிகள் பகவத்கீதை ஓதும் படத்தையும் போட்டு “இதுதானா மோடி பெத்துப் போட்ட புதிய இந்தியா” எனக் கேட்டிருந்தேன்.
எனது இந்த பதிவை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியதோடு எனக்கு தற்கொலை உணர்வு அதிகரித்துள்ளதாகவும் அதனால் அதற்கு சில டிப்ஸ் தருவதாகவும் கூறியுள்ளது.
மனதை கொஞ்சம் றிலாக்ஸ் செய்து வெளியில் சென்று கொஞ்ச நேரம் நடக்கும்படி அந்த டிப்ஸ் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனக்கு இது புரியவில்லை. இதை படித்ததும் சிரிப்புதான் வந்தது.
இதுதான் நடந்தது. பலர் எங்கே அந்த பதிவைக் காணவில்லை என்று கேட்கின்றபடியால் இந்த விளக்க பதிவை இடுகிறேன்.
அவர்களிடம் எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment