Saturday, June 30, 2018

தனது நிலத்திற்காக போராடும் இந்த வயதான தமிழ் பெண்,

தனது நிலத்திற்காக போராடும்
இந்த வயதான தமிழ் பெண்,
நக்சலைட் என்று முத்திரை குத்தப்பட்டு
தமிழக பொலிசாரினால் சுட்டுக்கொள்ளப்படலாம்.
இந்தப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டால்
அதனை சமூகவிரோதி என்று ரஜனி நியாயப்படுத்தலாம்.
ஒருபுறம் தீவிரவாதி என்று சுட்டக் கொன்றுவிட்டு
மறுபுறம் 10 லட்சம் ருபா தருவதற்கு தமிழக அரசு முன்வரலாம்
அறவழியில் போராடும் மக்களை கொல்வதா என யாரும் கேட்டால்
விசாரணைக் கமிஷன் அமைத்து மத்திய அரசு ஏமாற்றலாம்
ஆனால் உழைக்கும் மக்களின் கரங்கள் உயர்ந்தால்
மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் கூட தகர்ந்து போகும் என்பதை
வரலாறு நிரூபிக்கும்!
குறிப்பு- மக்களின் போராட்டத்தை அதரித்தமைக்காக இதுவரை மன்சூர் அலிகான், வளர்மதி. மனுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment