Saturday, June 30, 2018

•இந்திய வைக்கோற்பட்டரை நாய்!

•இந்திய வைக்கோற்பட்டரை நாய்!
தானும் படுக்காது தள்ளியும் படுக்காது
வைக்கோற்பட்டரை நாய் போல
தானும் செய்யாது, சீனாவையும் செய்ய விடாது
ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காமல்
தொடர்ந்து தடுத்து வருகிறது இந்திய அரசு.
தமிழர்களுக்கு 40ஆயிரம் வீடுகளை கட்டித் தர
முன்வந்துள்ளது சீனா. ஆனால் அதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கிறது இந்திய அரசு.
இந்தியா கட்டித் தர முன்வந்த உலோக வீடுகளை
மக்களும் விரும்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பும் விரும்பவில்லை.
மலையகத்தில் இந்திய வீட்டைவிட மலிவான விலையில் சிறந்த வீட்டை சீனா அமைத்துள்ளது.
இதனை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு சீன வீட்டிற்கு சம்மதம் தெரிவித்திருந்தது.
இப்போது இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றவுடன் சம்பந்தர் அய்யா தனக்கு எதுவும் தெரியாது என்று பல்டி அடிக்கிறார்.
நல்ல வீட்டைப் பெறுவதற்கு தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
இந்தியா கட்டி தரும் உலோக வீட்டைவிட சீனா கட்டித்தரும் வீடு மலிவாகவும் நன்றாகவும் இருக்கிறது என்று தைரியமாக இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டியதுதானே.
ஏன் சம்பந்தர் அய்யா தயங்கிறார்? அப்புறம் தனக்கு இந்தியாவில் பெறும் நலன்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுகிறாரா?
தமிழ் மக்களுக்கு எக் கேடு நடந்தாலும் பரவாயில்லை ஆனால் தன் நலனுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று சிந்திக்கும் சம்பந்தர் அய்யாவை என்ன செய்வது?
இந்தியாவுக்கு விசுவாசம் தெரிவித்து இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் மக்கள் அழிவது?

No comments:

Post a Comment