Saturday, June 30, 2018

இந்த நாய் ஏன் வலிய வந்து குரைக்கிறது?

இந்த நாய் ஏன் வலிய வந்து குரைக்கிறது?
எழுவர் விடுதலையை ஜனாதிபதி மறுத்தமையை சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.
அதுமட்டுமல்ல, ராஜீவ்காந்தி கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் கடும் சுகயீனத்துடன் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானையே.
ராஜீவ்காந்தி கொலையில் சோனியாகாந்திக்கோ அல்லது இலங்கை இந்திய அரசுக்கோ இல்லாத அக்கறை இந்த சுப்பிரமணியசுவாமிக்கு ஏன் வந்தது?
ராஜீவ்காந்தி கொலையில் இந்த சுப்பிரமணிய சுவாமிக்கும் பங்கு உள்ளது என்று இவருடன் கூட இருந்த திருச்சி வேலுச்சாமி முறையிட்டும் இவர் விசாரிக்கப்படவில்லை.
இவர் அந்தரப்படுவதைப் பார்த்தால் இவருக்கும் கொலையில் பங்கு உள்ளது என்று திருச்சி வேலுச்சாமி உண்மைதானோ என்று நம்ப வேண்டியுள்ளது.
ராஜீவ் குடும்பத்தினரே இந்த எழுவரையும் விடுதலை செய்வதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியபின்பும் இவர் எதற்காக விடுதலை செய்யக்கூடாது என்று குரைக்கிறார்?
நடிகர் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டபோது மௌனமாக இருந்தவர் எழுவர் விடுதலைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?
இந்த எழுவரும் தமிழர் என்பதால்தானே சுப்பிரமணியசுவாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இவர் தன்னை தமிழர் என்கிறார். தான் தமிழ்நாட்டில் பிறந்தவன் என்கிறார். ஆனால் இவர் எப்போதும் தமிழ் இனத்திற்கு எதிராகவே செயற்படுகிறார்.
தமிழ் இனம் விடுதலை பெற வேண்டுமெனில் முதலில் இந்த குரைக்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment