Saturday, June 30, 2018

•நம்புங்கள்! இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்கள்

•நம்புங்கள்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்கள்
இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றார்கள்
ஆனால் எஸ.வி சேகர் மட்டும் விதிவிலக்கு என்பதை சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
தமிழிசையை ஒரு பெண் தரக்குறைவாக முகநூலில் ஏசி விட்டார் என்றவுடன் உடன் சென்று கைது செய்த தமிழக பொலிஸ்
பெண்களை தரக்குறைவாக எழுதிய எஸ.வி. சேகரை மட்டும் இன்னும் கைது செய்யவில்லை.
உச்சநீதிமன்றம் கூறியும்கூட 50 நாட்களாக ஏன் சேகர் கைது செய்யப்படவில்லை?
கைது செய்ய வேண்டிய பொலிஸ் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அவர் பொலிஸ் பாதுகாப்புடன் உலா வருகிறார்.
வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு தேசியபாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எஸ்.வி. சேகர் மட்டும் இந்த பொலிசாரால் இன்னும் கைது செய்யப்படவில்லை.
தலைமறைவாக திரிவது எஸ்வி.சேகரா? அல்லது ஸ்கொட்லாந்து பொலிஸ் புகழ் தமிழ்நாட்டு பொலிஸா?

No comments:

Post a Comment