Saturday, June 30, 2018

•எந்த முகத்தோட போராட்டம் நடத்துறீங்கடா?

•எந்த முகத்தோட போராட்டம் நடத்துறீங்கடா?
எய்தவன் இருக்க அம்பை நோகுவதா? என்பதுபோல் பிள்ளையானை ஏவியவர்கள் சுதந்திரமாக திரியும்போது பிள்ளையானை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயம் இல்லைதான்.
ஆனால், பிள்ளையான் பதவியில் இருந்தபோது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முயற்சி செய்திருந்தால் இப்போது அந்த சட்டத்தின் கீழ் சிறையில் இருக்க வேண்டியிருந்திருக்காதே.
அப்பாவி தமிழ் மக்கள் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டபோது அச் சட்டத்தையும் மகிந்த ராஜபக்சவையும் ஆதரித்த பிள்ளையான், இன்று தனது விடுதலைக்காக அச் சட்டத்தை எதிர்த்து எந்த முகத்துடன் போராட்டம் நடத்துகிறார்?
தங்களைக் காப்பாற்றிக்கொண்ட மகிந்தராஜபக்ச குடும்பம் பிள்ளையானைக் காப்பாற்றவில்லை. பிள்ளையானை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றுகூட இதுவரை கோரவில்லை.
தன்னை கறிவேப்பிலைபோல் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டார்கள் என்பதை இனியாவது பிள்ளையான் உணர வேண்டும்.
தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பிள்ளையான் கோருவதைவிட தன்னை எய்தவர்கள் யார் என்பதை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.
அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோர வேண்டும்.
இதனை பிள்ளையான் செய்வாரா?

No comments:

Post a Comment