Thursday, November 29, 2018

தோழர் ஏ.எம்.கே அவர்களுக்கு அஞ்சலிகள்!

•தோழர் ஏ.எம்.கே அவர்களுக்கு அஞ்சலிகள்!
தமிழக நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த தோழரான ஏ.எம்.கே என அழைக்கப்படும் தோழர் கோதண்டராமன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு எமது அஞ்சலிகளை தெரிவிப்பதுடன் அவரை இழந்து தவிக்கும் தோழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
இந்திய புரட்சகர இயக்கங்களுடன் ஜக்கியத்தை மேற்கொள்ளும் எமது இயக்கத்தின் திட்டத்தின் ஒருபகுதியாக தோழர் ஏ.எம்.கே அவர்களையும் அவரது கட்சியினரையும் 1984ல் சென்னையில் சந்தித்தேன்.
அப்போது, தங்களுடன் மட்மே உறவு வைத்திருக்க வேண்டும் என்றும் வேறு புரட்சிகர அமைப்புகளோடு தொடர்புகள் மேற்கொள்ளக்கூடாது என்று தோழர் ஏ.எம்.கே கூறினார்.
அதற்கு நான் “ எமது இயக்கம் இந்தியாவில் உள்ள அனைத்து புரட்சிகர இயக்கங்களுடன் ஜக்கியப்பட விரும்புகிறது. அதன்படி தமிழகத்தில் தோழர் தமிழரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் உறவு வைத்திருக்கிறோம்” என்றேன்.
ஆனால் அவர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதன்பிறகு அவரை சந்திக்கவும் இல்லை. அவருடன் பழகவும் வாய்ப்பு கிட்டவில்லை.
எனினும் ஈழத்து இயக்கங்களில் ஒன்றான என்எல்எவ்ரி என்னும் புரட்சிகர அமைப்பிற்கு தோழர் ஏ.எம்.கே அவர்களது வழிகாட்டல் கிடைத்திருந்தது.
ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும் ஆதரவும் கொண்ட தோழர் ஏ.எம்.கே அவர்களின் மறைவுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment