Thursday, November 29, 2018

சம்பந்தர் அய்யா- தம்பி சுமந்திரன்! யாரப்பா அந்த தேவநேசன் நேசய்யா?

சம்பந்தர் அய்யா- தம்பி சுமந்திரன்! யாரப்பா அந்த தேவநேசன் நேசய்யா?
சுமந்திரன்- ஏன் ஜயா? அவர் முன்னர் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராக இருந்தவர்.
சம்பந்தர் அய்யா- அவர் தனக்கு கிடைத்த “தேசமான்ய” பட்டத்தை திருப்பிக் கொடுத்திட்டாராமே! அவர் ஏன் தம்பி இப்படி கருமங்களை யெல்லாம் பண்ணுறார்?
சுமந்திரன் - ஏன் ஜயா அது நல்லதுதானே? நான்கூட ஜனாதிபதியை "எங்கடை உப்பை தின்ற நாய்" என்றெல்லாம் பேசியதை படித்திருப்பீர்களே?
சம்பந்தர் அய்யா- புரியாமல் பேசாதையும் தம்பி. இனி இந்த பட்டம் வாங்கின நம்மட ஆட்களை யெல்லாம் இப்படி திருப்பி கொடுங்க என்று எழுதப் போறாங்கள். அதுமட்டுமல்ல ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை சுமந்திரன் துறப்பாரா? சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டு விலகுவாரா என்றெல்லாம் பேஸ்புக்கில் கிழிக்கப் போறாங்கள்.
சுமந்திரன்- என்னய்யா சொல்லுறீங்க? ஜனாதிபதி சட்டத்தரணியை பெறுவதற்கு எவ்வளவு கஸ்டப்பட்டேன். இப்ப அதை ராஜினாமா பண்ணச் சொன்னால் எப்படி செய்யிறது. அதைவிட உங்களாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டிட்டு இருக்க முடியாது .
சம்பந்தர் அய்யா- சரி சரி நான் பார்த்துக்கொள்கிறேன். இனியாவுது வாயை திறக்குமுன் கொஞ்சம் யோசியுங்கோ தம்பி.

No comments:

Post a Comment