Thursday, November 29, 2018

•தமிழனுக்கு தேவை தமிழ் அமைச்சர் அல்ல. தமிழ் இன உணர்வுள்ள அமைச்சரே!

•தமிழனுக்கு தேவை தமிழ் அமைச்சர் அல்ல.
தமிழ் இன உணர்வுள்ள அமைச்சரே!
எடப்பாடி – நான் இப்போது நூறு ரூபாய் நோட்டை கீழே போடப் போகிறேன். அதை எடுக்கும் தமிழன் சந்தோசப்படுவான் அல்லவா?
பன்னீர்செல்வம்- அதை பத்து ருபா நோட்டுகளாக போட்டால் பத்துபேர் எடுத்து சந்தோசப்படுவார்கள் அல்லவா?
இதைக் கேட்ட ஹெலி டிறைவர் “நீங்க இரண்டுபேரும் குதித்தால் முழு தமிழனும் சந்தோசப்படுவார்களே” என்றாராம்.
இது ஒரு பழைய ஜோக் தான். ஆனால் இப்போது தமிழக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றாக பொருந்துகிறது.
தமிழர்களே!
எங்கேயாவது ஹெலிகப்டரில் சென்று புயல் பாதிப்பை பார்த்த முதலமைச்சரை அறிந்திருக்கிறீர்களா?
எங்கேயாவது புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கைது செய்த அரசை பார்த்திருக்கிறீர்களா?
எங்கேயாவது சொந்த மக்கள் புயலால் பாதிக்கப்பட்டிருக்க ஜயப்பன் கோயிலுக்கு போன அமைச்சரை பார்த்திருக்கிறீர்களா?
எங்கேயாவது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் 3000கோடி ரூபாவில் சிலை கட்டிய பிரதமரை பார்த்திருக்கிறீர்களா?
எங்கேயாவது வருடத்திற்கு 85000கோடி ரூபாவை வரியாக கொடுத்துவிட்டு தான் பாதிக்கப்படும்போது ஒரு ரூபாகூட உதவி பெற முடியாமல் அப்பாவியாக நிற்கும் இனத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த அதிசயம் எல்லாம் உலகில் தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்.
இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் இன உணர்வுள்ள அமைச்சர் ஒருவர்கூட இல்லை.
தமிழ்நாடு தனிநாடாக மாறினால் மட்டுமே தமிழ் இனம் தலை நிமிர முடியும்.

No comments:

Post a Comment