Thursday, November 29, 2018

எம்.பி மாரை பன்றிகள் என கூறியதற்கு பன்றிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்!

•எம்.பி மாரை பன்றிகள் என கூறியதற்கு
பன்றிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்!
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார் தோழர் லெனின். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களை பன்றிகள் என நான் எழுதியிருந்தேன்.
தற்போது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது அவர்களை பன்றிகள் என எழுதியது தவறு என உணருகிறேன்.
எமது எம்.பி களை பன்றிகள் என எழுதியதன் மூலம் உண்மையான பன்றிகளை நான் கேவலப்படுத்தி விட்டதாக உணர்கிறேன்.
எனவே இதற்காக உண்மையான பன்றிகளிடம் நான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.
பாராளுமன்றம் பன்றிகள் உழலும் சாக்கடையைவிட கேவலமாக இருக்கிறது.
எமது அதிமேதகு ஜனாதிபதி, மாட்சிமை தங்கிய பிரதமர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்றியை விட கேவலமாக நடந்து கொள்கின்றனர்.
இவர்கள் வேலை பாராளுமன்றத்தில் நித்திரை கொள்வது அல்லது ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொள்வது.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் சம்பளம் மற்றும் அலவன்ஸ் வருமாறு,
salary -54,485 Rs
fuel -30,000 Rs
transport-10,000 Rs
Entertainment- 10,000 Rs
mobile phone -2000 Rs
meeting each -500Rs
Current bill - free
Land line phone - free
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும்
Secretary
Vehicle
Quarters
Computers
Bodyguards
ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.
ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.
எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா
இந்தளவு சம்பளம் மற்றும் வசதிகளை பெறும் இவர்கள் எந்த படிப்பும் படித்திருக்க தேவையில்லை. எந்த முன் அனுபவமும் கொண்டிருக்க தேவையில்லை. இவர்களுக்கு பென்சன் வயதெல்லையும்கூட இல்லை.
இவர்களுக்கு செலவு செய்யும் பணமும் வீண். இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
இது நல்லாட்சி அரசாம். இந்த அரசு தீர்வு தருமாம். எங்களை நம்பட்டாம். இந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சம்பந்தர் அய்யா.

No comments:

Post a Comment