Thursday, November 29, 2018

கோடிகள் குவிந்தாலே

கோடிகள் குவிந்தாலே
கோவணத்தையும் நான் மறப்பேன் -முருகா
துரோகிகள் புடை சூழ
அமைச்சராய் நான் வருவேன்
அஞ்சுதல் நிலைமாறி கெஞ்சுதல் உருவாக
ஏழ் பிறப்பிலும் இனத்தை காட்டிக் கொடுப்பேன்
மகிந்த திருமகனே அழகிய பெருமகனே
காண்பதெல்லாம் உனது முகம்
காலமெல்லாம் எனது மனம் உருகும்
பனி எது மழை எது கடல் எது
சகலதும் உன் கருணையில் கிடைப்பது
வருவாய் மகிந்தா தருவாய் மேலும் கோடி ரூபா!

No comments:

Post a Comment