Thursday, November 29, 2018

முக்கிய அறிவித்தல்

•முக்கிய அறிவித்தல்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39321 வாக்குகள் பெற்றார்.
இதை அவர் தற்போது 25 கோடி ரூபாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு விற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் ஒவ்வொருவருக்கும் சேரவேண்டிய தொகை 6357 ரூபா 92 சதம்.
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் வெட்கப்படாமல் அவரை அழைத்து தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுக் கொள்ளவும்.
கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காகவே தான் மகிந்த கும்பலுடன் சேர்ந்திருப்பதாக வியாழேந்திரன் கூறுகிறார். எனவே அந்த மக்களுக்குரிய பணத்தை நிச்சயம் தருவார் என நம்புகிறோம்.
அடுத்து இதேபோல் வடிவேல் எம்.பி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 52318 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரும் இதனை 20 கோடி ரூபாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு விற்றிருப்பதாக அறிய வருகிறது.
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் ஒவ்வொருவருக்கும் சேரவேண்டிய தொகை 3822 ரூபா 77 சதம் ஆகும்.
அவருடைய தொலை பேசி இலக்கம்- 0774004994
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் சங்கடப்படாமல் அவரை அழைத்து தங்களுக்குரிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மக்களே!
இது உங்கள் பணம். எனவே தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment