Thursday, November 29, 2018

பாம்பை விட கொடிய விஷம்

•பாம்பை விட கொடிய விஷம்
இந்த “சிவசேனை” சச்சிதானந்தம்!
பாம்பையும் சச்சிதானந்தையும் ஒன்றாக கண்டால்
பாம்பை விட்டு விடுங்கள்- ஆனால்
இந்த சச்சிதானந்தத்தை விட்டு விடாதீர்கள்
ஏனெனில் பாம்பை விட கொடிய விஷம் இது.
இந்திய உளவுப்படையினால் அனுப்பி வைக்கப்பட்ட
கிழட்டு “சிவசேனை” இது.
வழக்கமாக கோவணத்தோடு வேட்டி கட்டுபவர்
பிக்குவிற்கு வேட்டி கொடுக்கும் நாடகம் போட
காற்சட்டையுடன் வந்து திறமையாக நடிக்கிறார்.
அன்று முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
இன்று பிக்குவிற்கு வேட்டி கொடுத்தான் சச்சி
இல்லாதவனுக்கு கொடுப்பதே வள்ளல்
ஆண்டானுக்கு கொடுப்பது அடிமை
எத்தனையோ தமிழ் குழந்தைகள்
ஆடையின்றி நிர்வாணமாய் நிற்கும் மண்ணில்
புத்த பிக்குவிற்கு வேட்டி கொடுத்து
பெருமை தேடுகிறது இந்த கருங்காலி
வடக்கு கிழக்கு இணைய விட மாட்டேன்
தமிழருக்கு சமஸ்டி கொடுக்க விட மாட்டேன்
என்று திமிராக பேசுகிறார் ஜனாதிபதி மைத்திரி
அவரை கண்டிக்க முடியாத இந்த சச்சிதானந்தர்
மைத்திரியை ஒருமையில் ஏசிய சுமந்திரன் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
அது சரி, மைத்திரியை ஏசினால்
இவருக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இப்போது புரிகிறதா?
இது பாம்பை விட கொடிய விஷம் என்று!

No comments:

Post a Comment