Thursday, April 29, 2021

1983ல் நான் பெண்ணாடத்தில்

1983ல் நான் பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுடன் சயிக்கிளில் சென்ற காலத்தில் இந்த தம்பி பிறந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஏன் இவரின் தலைவர்கூட அப்போது அரசியலுக்கு வரவில்லை. “அகதி நாயே” என்பது எனக்கு புதிது அல்ல. நான் எட்டு வருடமாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவேளை பல தடவை தமிழக பொலிசார் இவ்வாறு ஏசியிருக்கின்றனர். இந்த பதிவை தலைவர் திருமாவளவனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் தனது தொண்டர்களுக்கு “அகதி என்பது இழிவு இல்லை.. அகதிகளுக்கு விமர்சன உரிமை தகுதி எல்லாம் உண்டு” என்பதை புரிய வைக்க வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பு – சம்பந்தப்பட்ட நபரை கண்டித்த தமிழக உறவுகளுக்கு நன்றி.

No comments:

Post a Comment