Thursday, April 29, 2021

யாழ் மேயர் (பிணையில்) விடுதலை!

•யாழ் மேயர் (பிணையில்) விடுதலை! பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்து வாக்குமூலம் பெறப்படும். அப்புறம் அந்த வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்கப்படும். அத்தகைய கொடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் மேயர் வழக்கத்திற்கு மாறாக பிணையில் உடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிசயம். ஆனால் உண்மை. இது எப்படி நிகழ்ந்தது? சிலர் இது சுமந்திரனின் வாதத்திறமையால் நிகழ்ந்த விடுதலை என்று கூறலாம். இன்னும் சிலர் இது அமைச்சர் டக்ளஸ் அவர்கள் ஜனாதிபதியுடன் பேசியதால் நிகழ்ந்தது என்று கூறலாம். வேறு சிலர் இது ஒரு நாடகம் என்றுகூட கூற முனையலாம். ஆனால் இதெல்லாம் உண்மை இல்லை என்பது இவர்களுக்கே நன்கு தெரியும். கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் உடனடியாக மேயர் கைதைக் கண்டித்தார்கள். தமிழ்நாடு. கனடா நாடுகளில் உள்ள தலைவர்கள்கூட கண்டித்தார்கள். சுமந்திரனுடன் 25 வழக்கறிஞர்கள் மேயருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். வழக்கத்திற்கு மாறாக அமெரிக்க தூதுவர்கூட தனது டிவீட்டர் பதிவில் இக் கைதைக் கண்டித்தார். இதனால்தான் வேறு வழியின்றி மேயரை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய அரசு முன்வந்தது. இதற்கெல்லாம் உண்மையான காரணம் மக்களே. மக்களால்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஜனாதிபதி அவர்களே! புலி வருகுது புலி வருகுது என்று பூச்சாண்டி காட்ட வேண்டாம். அப்புறம் உண்மையாகவே புலி வந்திடும்.

No comments:

Post a Comment