Thursday, April 29, 2021

என்னது? சுபவீ அவர்கள் தமிழ்நாட்டின் விடுதலைப் புலியா?

என்னது? சுபவீ அவர்கள் தமிழ்நாட்டின் விடுதலைப் புலியா? வன்னியரசு அவர்களே! நீங்கள் காமடி கீமடி எதுவும் பண்ணல்லயே? வேண்டுமானால் சுபவீ அவர்களை தமிழ்நாட்டின் இன்றைய பெரியார் என்று கூறுங்கள் அல்லது வேண்டுமானால் தமிழ்நாட்டு அம்பேத்கார் என்றுகூட கூறிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து தமிழ்நாட்டின் விடுதலைப்புலி என்று கூறி விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். விடுதலைப்புலிகளைப் பார்த்து விடுதலைக் குயில்கள் என்னும் அமைப்பை சுபவீ அவர்கள் ஆரம்பித்தது உண்மைதான். அவரை நம்பி சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவருடன் செயற்பட்டார்கள் என்பதும் உண்மைதான். அவ் இளைஞர்கள் அமைப்பிற்காக கொள்ளையிட முயன்றபோது பொலிசில் பிடிபட்டுவிட்டார்கள். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண கொள்ளை என நினைத்த பொலிஸ் விசாரணையில் இது விடுதலைக்குயில் அமைப்பிற்காக நடத்தப்பட்ட கொள்ளை என்பதை அறிந்தார்கள். இதனால் விடுதலைக்குயில்கள் அமைப்பின் தலைவர் சுபவீயை பொலிஸ் கைது செய்ய முயன்றது. அப்போது கலைஞர் கருணாநிதியின் கால்களில் விழுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார் சுபவீ அவர்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வயதான தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது ஈவு இரக்கமின்றி திருப்பி அனுப்பிய கலைஞர் கருணாநிதியை நியாயப்படுத்தியவர் இந்த சுபவீ அவர்கள் அத்தகைய சுபவீ அவர்களை தமிழ்நாட்டின் விடுதலைப்புலி என எவ்வாறு அழைக்க முடியும்?

No comments:

Post a Comment