Thursday, April 29, 2021

தம்பி ஐயன் கார்த்திகேயன்!

தம்பி ஐயன் கார்த்திகேயன்! சீமான் ஆமைக்கறிக் கதையை ஆனந்தி சசிதரனிடம் கேட்ட உங்களால் கனிமொழியுடன் பேசிவிட்டே தன் கணவர் ராணுவத்திடம் சரணடைந்தார் என்று அனந்தி கூறியது பற்றி ஏன் கேட்கத் தோன்றவில்லை? வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களின் படுகொலையில் திமுக வின் பங்கு பற்றிய குற்றச்சாட்டைவிட சீமான் பேசும் விடயங்கள்தான் முக்கியமாக உங்களுக்கு தோன்றுகிறதா? சரி. பரவாயில்லை. நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்றால் கலைஞர் கருணாநிதி 1990ல் ஆரம்பித்து வைத்த சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமை மூடுவாரா என ஸ்டாலினிடம் கேட்க முடியுமா? அல்லது, கலைஞர் தத்து எடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்பதையாவது ஸ்டாலினிடம் கேட்டு கூறுவீர்களா? இப்படிக்கு, உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஒரு அப்பாவி ஈழத் தமிழன்.

No comments:

Post a Comment