Thursday, April 29, 2021

இந்தியா ஈழத்; தமிழர்களுக்கு நண்பன் இல்லை

“இந்தியா ஈழத்; தமிழர்களுக்கு நண்பன் இல்லை என்று சொன்னவர் தோழர் தமிழரசன்” “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் சிறை கூடம் என்று சொன்னவர் தோழர் தமிழரசன்” “தமிழ் நாட்டு இளைஞர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற வேண்டும்; என்று சொன்னவர் தோழர் தமிழரசன். “இந்தியா அரசே ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி என்று மருதை ஆற்றில் குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன்” “தோழர் தமிழரசன் தோற்றுவித்த தமிழ்நாடு விடுதலைப் படை வலிமை பெற்று இருந்தால் ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கி இருக்க முடியுமா?” இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியிருக்கிறார். தேர்தல் பாதையில் பயணிப்பவர்தான் சீமான். ஆனாலும் அவர் தோழர் தமிழரசன் பெயரை தைரியமாக உச்சரித்திருக்கிறார். இதேபோன்று ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் போன்றவர்களால் ஏன் தோழர் தமிழரசன் பெயரை உச்சரிக்க முடியவில்லை? குறிப்பு - சீமான் அவர்களின் வீடியோ கீழே பின்னூட்டத்தில் உள்ளது.

No comments:

Post a Comment