Thursday, April 29, 2021

கர்ணன் !

•கர்ணன் ! அசுரன் , கர்ணன் இரண்டும் சாதிப் பிரச்சனைகளை பேசும் படங்கள். ஆனாலும் அசுரனைக் தூக்கிக் கொண்டாடிய அளவிற்கு புத்திஜீவிகள் கர்ணனைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அசுரனில் படிக்கும்படி தீர்வு கூறப்படுகிறது. கர்ணனில் திருப்பி அடிக்கும்படி கூறப்படுகிறது. வன்முறை பாவிக்கப்பட்டால் அதற்கு வன்முறை மூலமே பதில் அளிக்க வேண்டும் என்பதை கர்ணன் தெளிவாக கூறுகிறது. எப்படி இப்படி ஒரு படத்தை மாரி செல்வராஜ் அவர்களால் எடுக்க முடிந்தது? ஏனெனில் அவரும் இந்த வலியை அனுபவித்தவர். ஈழத்தில் துரையப்பாவைச் சுட்ட தோட்டாவே முதல் வன்முறை என பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்னரே சாதீய தீண்டாமைக்கு எதிராக வன்முறை மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. கத்தி வாள்கள் மட்டுமன்றி துப்பாக்கிகள் கைக்குண்டுகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் பலர் இறந்தும் இருக்கின்றனர். தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் அடிக்கு அடி என்னும் தத்தவத்தை கூறி தலைமை தாங்கினர். இதனாலேயே ஈழத்தில் பெரியாரியம் அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துக்கள் செல்வாக்கு பெறவில்லை.

No comments:

Post a Comment