Thursday, April 29, 2021

ரிசாத் அவர்களை கைது செய்த

ரிசாத் அவர்களை கைது செய்த முறைதான் தவறேயொழிய அவர் கைது செய்யப்பட்டது தவறு அல்ல. நள்ளிரவில் வீட்டை உடைத்து கைது செய்வது அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இப்படி கைது செய்திருப்பது தவறு ஆகும். சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தவும் சிங்கள மக்களை ஏமாற்றவும் செய்யப்பட்ட நாடகமாகவே இக் கைது இருக்கிறது. பக்கத்துவீடு தீப்பற்றி எரியும்போது எந்த ஒரு மனிதனும் தீயை அணைக்கவே முயல்வான். ஆனால் தமிழர்கள் எரிக்கப்பட்டபோது எரித்தவர்களுக்கு கொள்ளிக்கட்டை கொடுத்து உதவிய பக்கத்து வீட்டக்காரர் இந்த ரிசாத். இப்போது அதே கொள்ளிக்கட்டை தன்னை எரிக்க முயலும்போது தான் அப்பாவி என்றும் தன்னை காப்பாற்றும்படியும் ஓங்கி குரல் எழுப்புகிறார். டூ லேட் ரிசாத் அவர்களே. சிறை அனுபவம் தமிழ் மக்களின் வலியை உங்களுக்கு உணர வைக்கும் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment