Thursday, April 29, 2021

மீண்டும் எழுவோம்!

•மீண்டும் எழுவோம்! தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த இனம் இன்று அடிமையாய் வீழ்ந்து கிடக்கின்றதே வந்தாரை வாழ வைத்த எமது இனம் இன்று தான் வாழ முடியாமல் தவிக்கிறதே ஆயிரம் ஆயிரமாய் மாண்ட மாவீரர்களே மீண்டும் எழுவோம் உமது கல்லறைகளின் சாட்சியாய் எழுவோம் எழுவோம் எழுவோமெல்லோ மாண்டவர் நினைவாய் மீண்டும் எழுவோமெல்லோ எத்தனை முறைகள் வீழ்ந்தோமெல்லோ அத்தனை முறையும் மீண்டும் எழுந்தோமெல்லோ அத்தனை முறையும் எழுந்ததை எண்ணியெல்லோ இந்தமுறையும் மீண்டும் எழுவோமெல்லோ வெலிக்கடை படுகொலைகளை எண்ணியல்லோ மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ முள்ளிவாயக்கால் படுகொலைகளை எண்ணியெல்லோ மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ கொக்கட்டிச்சோலை கொலைகளை எண்ணியெல்லோ மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ ஆயிர ஆயிரமாய் புதைத்ததை எண்ணியல்லோ மீண்டும் மீண்டும் முளைத்து எழுவோமெல்லோ துண்டு துண்டாய் வெட்டி வீசியதை எண்ணியல்லோ கடல்அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ

No comments:

Post a Comment