Thursday, April 29, 2021

இன்று மியான்மர்

•இன்று மியான்மர் நாளை சிறீலங்கா ?? மியான்மரில் சிறுபான்மை இனமான ரோஹிங்கியாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து அமைதி காத்தனர். ஆனால் இப்போது அந்த பெரும்பான்மை இனத்தவரையே ராணுவம் வேட்டையாடுகிறது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சுட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சிறீலங்காவிலும் தமிழ் மக்களை ராணுவம் படுகொலை செய்தபோது பெரும்பான்மை இனமான சிங்கள இனம் தமக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்தது. ஆனால் பர்மாவில் நடைபெற்றதுபோன்று சிறீலங்காவிலும் விரைவில் ராணுவத்தின் துப்பாக்கிகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பும். பாசிச அரசுகள் இப்படித்தான் செய்யும். குறிப்பு - 1971 மற்றும 1989 களில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்;டார்கள்.

No comments:

Post a Comment