Thursday, April 29, 2021

இலங்கை அரசு சுதந்திரதினம் கொண்டாடுகிறத

இலங்கை அரசு சுதந்திரதினம் கொண்டாடுகிறது. ஆனால் தமிழ் மக்கள் தமது இறந்தவர்களை நினைவு கூர்வதை கொரோனோவை காரணம் காட்டி தடுக்கிறது. இப்போதும் கொரோனோவை காரணம் காட்டி மே தின கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி தாம் மேதினத்தை கொண்டாடப்போவதாக ஜேவிபி கட்சியினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்ல முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரவும் தமிழ் மக்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆம். உழைக்கும் மக்களின் உரிமை நாளாம் மே தினம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும். அதேபோன்று தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு ஆதரவாக ஜேவிபி குரல் கொடுத்தமை வரவேற்கப்பட வேண்டியதே. சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ள ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நல்லதொரு மாற்றமே. ஜேவிபி க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment