Thursday, April 29, 2021

வன்மையான கண்டனங்கள்!

•வன்மையான கண்டனங்கள்! யாழ் மேயர் மணிவண்ணன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். தமிழ் மக்களை மிரட்டி எப்போதும் ஒரு அச்ச நிலையில் வைப்பதற்காகவே இக் கைது நடைபெற்றுள்ளது. எனவே இதற்கு எதிராக கட்சிபேதமின்றி அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே அவர்களின் கவனத்தை திருப்ப அரசு வேறுவழியின்றி இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. யாழ் மேயர் செய்தது தவறு என்றால் அவரிடம் ஆளுநர் கடிதமூலம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மாறாக அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது தவறாகும். யாழ் மேயர் செய்தது போன்றே கொழும்பு மேயரும் செய்திருக்கிறார். ஆனால் கொழும்பு மேயர் கைது செய்யப்படாதது மட்டுமன்றி அது குறித்து ஒரு கேள்விகூட கேட்கப்படவில்லை. முதலில் புலத்தில் சட்டரீதியாக இயங்கிவரும் தமிழ் அமைப்புகளை எந்த விசாரணையும் இன்றி தடை செய்தார்கள். அடுத்து நாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் உட்பட பல அமைப்புகளை தடை செய்ய முடிவு செய்துள்ளார்கள். இப்போது யாழ் மேயரையே கைது செய்து அடைத்து மக்களை மிரட்ட முனைந்துள்ளார்கள்.. எனவே அனைவரும் ஒன்றுபட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதன் மூ

No comments:

Post a Comment