Thursday, April 29, 2021

மணி அண்ணைக்கு ஒரு பதில் !

•மணி அண்ணைக்கு ஒரு பதில் ! 2009 ற்கு முன்னர் தமிழக போராட்டங்களுக்கு ஆதரவு தரும்படி புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நேரிடையாகவே நீங்கள் கேட்டிருக்க முடியும். கேட்டிருக்க வேண்டும். அப்போது பேசாமல் இருந்துவிட்டு ஏன் ஆதரவு தரவில்லை என்று இப்போது அதுவும் ஒரு அகதியிடம் கேட்கிறீர்கள். 2009 ற்கு பின்னர் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தனர். அடுத்து நடைபெற்ற ஸ்ரெட்டலைட் போராட்டத்திற்கும் ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆணவக் கொலைக்கு எதிராக நீங்கள் போராட்டம் நடத்தினால் அதற்கும் நிச்சயம் ஈழத் தமிழர்கள் ஆதரவு தருவார்கள். நீங்கள் குறிப்பிடும் சாதிப் பிரச்னைக்கும் சேர்த்து தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து 1983ல் தோழர் தமிழரசன் போராடியபோது அதற்கு நாம் உதவி செய்தோம். அதன்பிறகு தோழர் பொழிலன் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதற்கும் நாம் உதவினோம். இதனாலேயே நான் எட்டு வருடம் தமிழக சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது சென்னை சிறையில் இருந்த நீங்கள் இது குறித்து என்னுடன் பேசியிருக்கிறீர்கள். பெரியாரிய இயக்க இளைஞர்கள் தமிழதேசிய மீட்பு படை ஆரம்பித்தபோது அவர்களுக்கு பயிற்சி , ஆயுதம் எல்லாம் வழங்கி உதவியவர்கள் புலிகள். இதெல்லாம் தெரிந்த நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. இனியாவது பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து செயற்படுதல் என்ற நிலைக்கு நகர்வோம். அதற்கு உங்கள் கேள்வி உதவி புரியட்டும்.

No comments:

Post a Comment