Thursday, April 29, 2021

ஜனாதிபதியால் தன் உயிருக்கு ஆபத்த

ஜனாதிபதியால் தன் உயிருக்கு ஆபத்து என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இப்படி ஒரு அவலம் இலங்கை வரலாற்றில் முன் எப்போதுமே நடந்ததில்லை. கடந்த ஆட்சியில் நீதி அமைச்சராக இருந்து ராஜபக்சா குடும்பத்தை சட்டத்தின் பிடியில் இருந்து யார் காப்பாற்றினாரோ அவருக்கே இப்போது கோத்தபாயா ராஜபக்சாவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் கொழும்பில் துறைமுகம் நகர் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப் பிரதேசத்தில் இலங்கை சட்டம் எதுவும் செல்லுபடியாகாது. அந்தளவு அதிகாரம் கொண்ட பிரதேசம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது. என்ன கொடுமை இது?

No comments:

Post a Comment